11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியலில் திருத்தம் செய்வதற்கு அரசு தேர்வுத்துறை காலக்கெடு அளித்துள்ளது.
இது தொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்ட அறிக்கையில், "12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர் விபரங்கள் அடங்கிய பட்டியலை, அரசு தேர்வுத்துறையின் www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்கள் பயனாளர் அடையாள எண்ணை பயன்படுத்தி, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவற்றில் பிழைகள் இருந்தால் மார்ச் 19ம் தேதி முதல் 23ம் தேதிக்குள் திருத்தம் செய்து கொள்ளலாம்.

இதையடுத்து 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியபின் அரசிதழில் பதிவு செய்து பெயர் மாற்றம் செய்த மாணவர்களுக்கு மட்டும் அரசிதழில் உள்ளவாறு மாற்றம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இப்பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் சேர்ப்பது தொடர்பாக பின் அறிவிக்கப்படும். இதற்கிடையில் மாணவர்களின் பயிற்று மொழியில் திருத்தங்கள் இருந்தால் [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு வரும் 24ம் தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள் அனுப்ப வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم