தமிழகத்தில் கொரோனா பரவல் மூன்றாவது அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, அனைத்து கோயில்களிலும் திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாளை (18-ம் தேதி) கொண்டாடப்படும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தென்காசி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'பங்குனி உத்திர திருநாள் மார்ச் 18-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி, நாளை (18-ம் தேதி) தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளதால், அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்று அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

ஆனால், பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தோர்வுகள் மற்றும் முக்கியத் தோவுகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது' என்று கூறப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم