அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனாவின் 2-வது அலை பரவத்தொடங்கியது. இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கவும், அவசியம் ஏற்பட்டால் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை தாக்கம் குறைந்த பின்னர் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டன. டிசம்பர் மாதம் 6ஆம் தேதி 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனாவின் 3-வது அலை மற்றும் ஒமைக்ரான் தொற்று கடந்த ஜனவரி மாதம் பரவத்தொடங்கியது. இதனை தொடர்ந்து புதுவையில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு ஜனவரி மாதம் 10ஆம் தேதி முதல் விடுமுறை விடப்பட்டது. 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கும், கல்லூரிகளுக்கும் ஜனவரி மாதம் 18ஆம் தேதியில் இருந்து விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடத்தப்பட்டன. கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி 1 முதல் 12ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதனை தொடர்ந்து புதுச்சேரி, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆண்டு இறுதித்தேர்வு கடந்த வாரம் இறுதியில் தொடங்கியது. இந்த தேர்வுகள் நாளையுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது.

இந்நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "புதுச்சேரி, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 15ஆம் தேதிக்குள் மாணவர்கள் தேர்ச்சி பட்டியலை கண்காணிப்பு அதிகாரியிடம் பள்ளி நிர்வாகம் சமர்ப்பித்து ஒப்புதல் பெறவேண்டும்.

மாணவர்கள் பள்ளிக்கு வருகை நாட்கள் குறைவு, கட்டணத்தை முழுமையாக செலுத்தவில்லை உள்ளிட்ட எந்த ஒரு காரணத்திற்காகவும் அவர்களின் தேர்ச்சியை தடுத்து நிறுத்தக் கூடாது. எல்.கே.ஜி. முதல் 9ஆம் வகுப்பு வரை பள்ளிகள் நாளையுடன் நிறைவு பெறும். அந்த வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் தொடங்கும். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மே) 30ஆம் தேதி வரையும் பிளஸ்-2 பொதுத்தேர்வு மே 28ஆம் தேதி வரையும் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 1 முதல் 9ஆம் வகுப்பு வரை ஆல்பாஸ்..! அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு..!

Post a Comment

Previous Post Next Post