அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வரும் மே மாதத்துக்கான செமஸ்டர் தேர்வு ஜூன் 1 முதல் 14 வரை நேரடி எழுத்துத்தேர்வாக நடைபெறும்.
தொலைதூரக் கல்வியில் இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வரும் மே மாதத்துக்கான செமஸ்டர் தேர்வு ஜூன் 1 முதல் 14 ஆம் தேதி வரை நடத்த உள்ளதாகவும், இந்த தேர்வுகள் நேரடி எழுத்துத்தேர்வாக நடைபெறும் என்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் (Annamalai University) தெரிவித்துள்ளது.

இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "தொலைதூர கல்வி இளங்கலை, முதுகலை பயிலும் மாணவர்களுக்கு (annamalai university dde exam 2022) நடைபெரும் மே மாதத்திற்கான செமஸ்டர் தேர்வு ஜூன் 1 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறும்” என குறிப்பிட்டுள்ளது.

சமீபத்தில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகதின் திறந்தவெளி மற்றும் தொலைதூர (ODL) படிப்புகளுக்கு UGC அங்கீகாரம் இல்லை எனவும், இனி மாணவர்கள் அங்கு ODL படிப்புகளில் சேர வேண்டாம் எனவும் UGC தெரிவித்திருந்தது.

இது குறித்து UGC வெளியிட்டிருந்த அறிக்கையில், கடலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் UGC அங்கீகாரம் பெறாமல், தொலைநிலை படிப்புகளில் மாணவர்களை சேர்த்து வருகிறது. இது தொலைநிலை படிப்புக்கான ஒழுங்குமுறை விதிகளை மீறும் செயல் எனவும், UGC அங்கீகாரம் பெறாமல், எந்த உயர் கல்வி நிறுவனமும் தொலைநிலை மற்றும் திறந்த நிலை அல்லது ‘ஆன்லைன்’ படிப்புகளை நடத்த அனுமதி கிடையாது எனவும் தெரிவித்திருந்தது.

மேலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு 2014 - 15 ஆம் கல்வியாண்டுக்கு மட்டுமே தொலைநிலை படிப்புகளை நடத்த அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அதன் பிறகு, அந்த படிப்புக்கு அங்கீகாரம் பெறப்படவில்லை உணவுக்கு கூறப்பட்டுள்ளது. எனவே, UGC அங்கீகாரம் பெறாமல், அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் படிப்புகள் செல்லத்தக்கதல்ல. எனவே, அங்கீகாரம் பெறாத படிப்புகளைப் படித்தால் உயர்நிலைக் கல்வியில் சேர முடியாது என்றும் வேலை வாய்ப்பும் கிடைக்காது என்றும் UGC தெரிவித்துள்ளது. எனவே, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடத்தும் தொலைநிலை படிப்புகளில், மாணவர்கள் சேர வேண்டாம் என UGC திட்டவட்டமாக குறிப்பிட்டிருந்தது.

இதை தொடர்ந்து, தொலைதூர கல்வி படித்தவர்கள் ஸ்லெட், நெட் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருந்தாலும் கல்லூரி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

أحدث أقدم