11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 10 முதல் 17-ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. 1-ம்‌ வகுப்பு முதல்‌ 9-ம்‌ வகுப்பு வரை மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு 13-யுடன்‌ முடிவடைந்தது 14.05.2022 முதல்‌ கோடை விடுமுறை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தேர்வு சார்ந்த விடைத்தாள்‌ திருத்தும்‌ பணிகள்‌ முடிந்து ஒன்பதாம் வகுப்பு வரை பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 10 முதல் 17-ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மீண்டும் பள்ளி திறக்க அரசுக்கு கோரிக்கை ;

தமிழக அரசு ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்தது. 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு பணிகள் நிறைவடையாத நிலையிலும், மே 31 -ம் தேதி தேர்வுகள் முடிந்தாலும், ஜூன் மாதம் 10 முதல் 12-ம் தேதி வரையிலும் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறலாம் என்பதால் பள்ளி திறப்பதை சற்று தாமதப்படுத்தி ஜூன் மாதம் 20 அல்லது 27-ம் தேதி இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.

ஏற்கெனவே ஜூன் மாதம் 13-ம் தேதி முதல் விடுப்பு அளிக்கப்பட்டு 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் வீடுகளில் உள்ளனர். தொடக்கநிலை ஆசிரியர்களும் 20-ம் தேதி முதல் விடுப்பில் சென்று விட்டனர். அரசு இதனை மனதில் வைத்து 1-9 வகுப்புகளை ஜூன் 13-ம் தேதி முதல் அதாவது ஜூன் மாதம் திறந்து மாணவர்களுக்கு எழுத்து அறிவிப்பது மிகவும் சிறப்பாக இருக்கும். உயர் வகுப்புகளை அரசு அறிவித்துள்ளபடி ஜூன் 20 அல்லது 27-ம் தேதி திறக்கலாம் எனவும், அரசு இதனை செயல்படுத்த வேண்டும் என்பதே பெரும்பாலான கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

Post a Comment

أحدث أقدم