12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 23 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 23 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. மொத்தம் 8.37 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். முதல் நாளான நேற்று தமிழ்ப்பாட தேர்வு நடந்து முடிந்தது. மாணவர்கள் ஆர்வமுடன் வந்து தேர்வு எழுதினர். இதனிடையே தமிழகம், புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. 9 லட்சத்து 55 ஆயிரம் மாணவ மாணவியர் இந்த தேர்வில் இன்று பங்கேற்றனர். தற்போது பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகளில், பள்ளிக் கல்வித் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 23 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஜூன் 2 ஆம் தேதி முதல் 12 வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கும். ஜூன் 23 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் 7 ஆம் தேதி வெளியாகும். 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 17 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிடையே 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை என்றும் ஒரு மாதம் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 13ம் தேதி 1 முதல் 9 வரையிலான வகுப்புகள் தொடங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. முன்னதாக இது குறித்து பேட்டி அளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், தேர்வு நாளில் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்றும், முன்கூட்டியே கோடை விடுமுறை அளிப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

أحدث أقدم