சென்னை பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக மாணவர்களுக்கு கல்லூரி தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டு வந்தது.
தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் அனைவருக்கும் நேரடி முறையில் தேர்வு நடைபெறும் என உயர்கல்வித்துறை திட்டவட்டமாக அறிவித்தது.

அதன்படி கல்லூரி மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் ஜூன் இரண்டாம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதி முதல் நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم