மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே மருத்துவ படிப்புகளில் சேர முடியும்.
கடந்த 2016ஆம் வருடம் முதல் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவுத்தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்ததாக கூறப்பட்ட நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் 20ம் தேதி வரை நீட்டிப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நீட் தேர்வு எழுதுவதற்கு அதிகபட்ச வயதுவரம்பு பொதுப்பிரிவினருக்கு 25 ஆகவும், இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 30 ஆகவும் இருந்தது. ஆனால் தற்போது வயது வரம்பு தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏராளமானோர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்வர்களுக்கு கேள்விகளில் சாய்ஸ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக பல்வேறு பள்ளிகளில் பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதனால் இந்த வாய்ப்பு வழங்கப்படுகின்றது. அதாவது ஒவ்வொரு பிரிவிலும் 45 கேள்விகள் இடம்பெறும்.

ஆனால் இந்த ஆண்டு விலங்கியல், தாவரவியல், வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களில் இருந்து 50 கேள்விகள் கேட்கப்படும். அதில் 45 கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்தால் போதும். ஐந்து கேள்விகளை தவிர்த்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நீட் யுஜி தேர்வை முடிப்பதற்கு விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் கூடுதலாக 20 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. 180 கேள்விகளுக்கு விடையளிக்க 20 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டு 3 மணி நேரம் 20 நிமிடங்கள் தேர்வு எழுதலாம். இந்த ஆண்டு மொத்தம் 543 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது.

Post a Comment

Previous Post Next Post