தமிழகத்தில் 117 மையங்களில் 5629 பணியிடங்களுக்கு நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2 ஏ தேர்வு நடைபெறுகிறது.
இந்த தேர்வு காலை 9.30 மணிக்கு ஆரம்பித்து 12.30 மணி வரை நடைபெறும். தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 100 கேள்விகள்மொழிப்பாடத்திட்டத்திலும், 75 கேள்விகள் பொதுஅறிவு, 75 கேள்விகள் திறனாய்வு என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. தேர்வர்கள் 8:30 மணிக்கு தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும். 9 மணிக்கு பிறகு வரும் தேர்வர்களுக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post