சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 31-ந் தேதி முடிவடைந்தது.
இதனையடுத்து, தேர்வு முடிவுகள் ஜூலை 7-ம் தேதி வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்தது. தற்போது முன்கூட்டியே வெளியிடப்படுகிறது.

இந்நிலையில், பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 27-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை www.dge.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم