தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் மாணவிகள் விண்ணப்பிப்பதற்கு ஜூன் 30 அதாவது இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வருகின்ற ஜூலை 10ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவித்து வெளியாகி உள்ளது. www.penkalvi.gov.in என்ற இணையதளத்தில் மாணவிகள் தங்கள் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் இந்த கல்வித் தொகை திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை கட்டணமில்லா 14417 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மாணவிகள் தெரிந்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Post a Comment

أحدث أقدم