பள்ளிகள் இனி காலை 8 மணி முதல் மதியம் 2:30 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும் என ஹரியானா உத்தரவிட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படும் என்று ஹரியானா அரசு அறிவித்துள்ளது. கோடை விடுமுறை முடிவடைய உள்ள நிலையில், பள்ளி நேரம் குறித்த அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது. ஹரியானா பள்ளிக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பள்ளிகள் இனி காலை 8 மணி முதல் மதியம் 2:30 மணி வரை மட்டுமே நடத்தப்படும். திருத்தப்படும் நேரம் இன்று முதல் பின்பற்றப்படும். அனைத்துப் பள்ளிகளும் இந்த உத்தரவை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த முடிவை ஹரியானாவின் தகவல், மக்கள் தொடர்பு மற்றும் மொழிகள் துறை இயக்குநரகம் தனது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது. அதில், “கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று முதல் ஹரியானாவில் பள்ளி நேரம் காலை 8:00 மணி முதல் மதியம் 2:30 மணி வரை இருக்கும்.” மாநிலம் முழுவதும் நிலவும் கடுமையான வெயிலின் காரணமாக, 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி நேரங்களை மாற்றி அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post